சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான இணையவழி மாணவர் சேர்க்கைக்கான விண் ணப்பங்கள் கடந்த 17-ஆம் தேதி தொடங்கிய நிலையில்,மாணவர்கள் விண்ணப்பிக்க ஏது வாக மாணவர் உதவி மையத்தை பல்கலைக்கழக துணைவேந் தர் பேராசிரியர் ராம.கதிரேசன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் ரா.சிங்காரவேல்,தேர்வு கட்டுப்பட்டு அதிகாரி எம்.பிரகாஷ்,துணை இயக்குநர் மாணவர் சேர்க்கைப் பிரிவு பி.பாலபாஸ்கர்,மக்கள் தொடர்பு அதிகாரி ஜி.ரத்தின சம்பத், துணைவேந்தரின் தனிச் செயலர் ஜே.ஹெச்.பாக்யராஜ் மற்றும் புல முதல்வர்கள், தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும், மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்களை www.ann amalaiuniversity.ac.in இணைய
தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என பதிவாளர் ரா.சிங்காரவேலு தெரிவித்தார்.