தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் உத்தரவின் பேரில், பொதுச்செயலாளர் புஸ்ஸி N.ஆனந்து அறிவுறுத்தலில் உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட்டது.
கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்கி வழிகாட்டுதலில்
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்டம் வால்பாறை நகர தலைமை சார்பில் நகர தலைவர் ஆண்ட்ரூஸ் தலைமையில் நகர செயலாளர் சையத் அலி முன்னிலையில் பழங்குடி மக்கள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாணவர் அணி ரபீக், இளைஞரணி சிவா, மகளிரணி அபிதா, ஆனந்தி,15வது வார்டு செயலாளர் முரளி, காத்தாடி மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.