fbpx
Homeபிற செய்திகள்கோவையில் உடல்நலம் தேறி புறப்பட்டது பெண் யானை

கோவையில் உடல்நலம் தேறி புறப்பட்டது பெண் யானை

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நலம் தேறியதால், வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.

மருதமலை அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் யானை ஒன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. அந்த யானையுடன் நான்கு மாத ஆண் குட்டி யானையும் இருந்தது. தொடர்ந்து அந்த யானைக்கு வனத்துறையின் மருத்துவக்குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். 

யானையை கிரேன் வாகனத்தின் உதவியுடன் தூக்கி நிறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. யானைக்கு சத்து மாத்திரைகளை புளி வெல்லம் ஆகியவற்றுடன் இடித்து அரிசி சோற்றில் வைத்து உணவும்  வழங்கப்பட்டது.

இதனிடையே பெண் யானைக்கு தற்போது உடல் நிலை தேறியதால், அது வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. உயிரிழக்கும் தருவாயில் இருந்த யானைக்கு சிகிச்சை அளித்த வனத்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img