fbpx
Homeபிற செய்திகள்கோவை: யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளை துவக்க விழா

கோவை: யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளை துவக்க விழா

கோவை ராம்நகரில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா புதுப்பிக்கப்பட்ட கிளை துவக்க விழா நடை பெற்றது.

பொதுத்துறை வங்கி யான யூனியன் பேங்க் ஆப் இந்தியா கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் 67 கிளை களை கொண்டு இயங்கி வருகிறது.
இந்நிலையில் கோவை ராம்நகர் பகுதியில் இயங்கி வந்த யூனியன் பேங்க் ஆப் இந்தியா புதுப்பிக்கப்பட்டு அதே பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி சாலையில் புதிய கட்டிடத்தில் தனது சேவையை துவங்கியது.

இதில் கோவை மண்டல தலைவர் s.s.லாவண்யா முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர் களாக சதர்ன் இண்டியா மில்ஸ் அசோசியேஷன் தலைவரும், சிவா டெக்ஸ்யார்ன் நிறுவ னத்தின் நிர்வாக இயக்குன ருமான சுந்தர ராமன் புதுப்பிக்கப்பட்ட கிளை அலுவலகத்தையும், ஏ.டி.எம்.அறையை எல்.ஐ.சி.கார்ப்பரேட் ஏஜென்ட் சீனிவாசன், ஸ்ட்ராங் ரூம் அறையை பட்டய கணக்காளர் செல் வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இவ்விழாவில் வங்கியின் துணை மண்டல தலைவர்கள் மகாதேவ் மற்றும் D.முருகானந்தம், முதன்மை மேலாளர் ராம்ஜி ராம்நகர் கிளை மேலாளர் அனீஸ் மற்றும் வங்கி அதிகாரிகள், ஊழி யர்கள் கலந்து கொண் டனர்.

இக்கிளையில் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதமான வங்கி சேவைகளும் வழங்கும் வகையில் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

படிக்க வேண்டும்

spot_img