fbpx
Homeபிற செய்திகள்நந்தா கல்வி நிறுவனங்கள் சார்பில் மாரத்தான் போட்டி

நந்தா கல்வி நிறுவனங்கள் சார்பில் மாரத்தான் போட்டி

உலக குருதியாளர்கள் தினத் தையொட்டி நந்தா கல்வி நிறு வனங்களின் மனிதம் அமைப்பு சார்பில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் நடைபெற்றது திரளான பள்ளி, கல்லூரி மாணவ-மாண விகள் கலந்து கொண்டனர். ஈரோடு டவுன் டிஎஸ்பி கே.ஆர்.ஜெய்சிங், பேச்சாளர் ஈரோடு கதிர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இதில், ஆண்களுக்கான மினி மராத்தான் வஉசி விளையாட்டு மைதானத்தில் தொடங்கி பெருந்துறை நந்தா தொழில்நுட்ப வளாகம் வரை 21 கிலோ மீட்டர், பெண்களுக்கான மினி மாராத்தான் நந்தா சென்டரல் சிட்டி பள்ளி வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கும் நடந்தது.

இதையடுத்து, நந்தாவின் ‘உயிர்த்துளி’ அமைப்பின் சார்பில் ரத்தத்தான சிறப்பு முகாம் நந்தா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கல்லூரி தலைவர் வி.சண்முகன் தலைமையில் நடைபெற்றது. 150க் கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.

கல்லூரி செயலர்கள், எஸ்.நந்த குமார் பிரதீப், எஸ்.திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி முனைவர் எஸ்.ஆறுமுகம், பொறியியல் கல்லூரியின் முதல்வர் யு.எஸ்.ரகுபதி, பிசியொதெரபி முதல்வர் டாக்டர் வி.மணிவண்ணன் வாழ்த்துரை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img