fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு வேளாண் பல்கலை. துணைவேந்தருக்கு கௌரவ கர்னல் பதவி

தமிழ்நாடு வேளாண் பல்கலை. துணைவேந்தருக்கு கௌரவ கர்னல் பதவி

தேசிய மாணவர் படை சார்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமிக்கு கௌரவ கர்னல் பதவி வழங்கும் விழா தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைக்கழகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் உள்ள தேசிய மாணவர் படைக்கு துணைவேந்தர் ஆற்றிய தொண்டைப் போற்றும் விதமாக இந்த கௌரவ கர்னல் பதவி வழங்கப்பட்டது.

காமடோர் அதுல் குமார் ரஸ்தோகி, துணை இயக்குனர் ஜெனரல், தேசிய மாணவர் படை மையம் (தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்த மான் நிக்கோபர்) இந்த கௌரவ பதவியை துணை வேந்தருக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, இந்தக் கர்னல் பதவி தன்னைப் பெருமைப்படுத்துவதாகவும், சீர்மிகு சமுதாயத்தை உருவாக்க தேசிய மாணவர் படை மாணாக்கர்களுக்கு எப்பொழுதும் துணை நிற்பதாகவும் உறுதி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img