fbpx
Homeபிற செய்திகள்கொங்கு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்ட வகுப்புகள் துவக்கம்

கொங்கு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்ட வகுப்புகள் துவக்கம்

கோவை தென்சேரிமலை மடத்து ஆதினம் முத்துராமசாமி, ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (கேஏஎஸ்சி) வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாம் ஆண்டு பட்ட வகுப்புகள் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை ஆசிர்வதித்தார்.

பிஎஸ்ஜி கலைக் கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். கல்லூரி அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் ஆர்.குமாரசாமி, செயலர் பி.சத்தியமூர்த்தி, பொருளாளர் கே.வி.ரவிசங்கர், தாளாளர் பி.டி.தங்கவேல், கொங்கு பொறியியல் கல்லூரி தாளாளர் ஏ.கே.இளங்கோ, கொங்கு பாலிடெக்னிக் தாளாளர் ஏ.வெங்கடாசலம், கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர்  ஆர்.எம்.தேவராஜா, கேவிஐடி அறக்கட்டளை அறங்காவலர்கள் பி.சி.பழனிசாமி, வி.கே.முத்துசாமி, கல்லூரி முதல்வர் எச். வாசுதேவன், வணிகவியல் துறை தாளாளர் கே.எம்.குமரகுரு, பேராசிரியர்கள், பெற்றோர்கள் பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img