fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலையில் ஜமாபந்தி நிறைவு விழா

திருவண்ணாமலையில் ஜமாபந்தி நிறைவு விழா

கடந்த 7 நாட்களாக திருவண்ணாமலை சுற்றுவட்டாரத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் மக்களிடமிருந்து பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, முதியோர் கார்டு, சான்றுகள் பெறுதல், பல்வேறு துறை சார்ந்த கோரிக்கைகள் என மொத்தம் 968 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 318 ஏற்கப்பட்டன. 

இதனைத்தொடர்ந்து, தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில், ஆர்டிஓ மந்தாகினி  நலத்திட்ட உதவிகள்  வழங்கினார். இந்நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் கலை வாணி கலைமணி , வருவாய் கோட்டாட்சியரியன்  நேர்முக உதவியாளர் முருகன், வட்டாட்சியர் தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பரிமளா, வட்ட வழங்கல் அலுவலர் துரைராஜ்,  துணை வட்டாட்சியர் மணிகண்டன்,  துரிஞ்சாபுரம் மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ்குமார், திருவண்ணாமலை மண்டல துணை வட்டாட்சியர் மஞ்சுநாதன், வட்ட துணை ஆய்வாளர் தரணிவாசன்,  வருவாய் ஆய்வாளர் சுதா,திருவண்ணாமலை நகர கிராம நிர்வாக அலுவலர் காமேஷ் குமார் மற்றும் விவசாயிகள் சங்கம் வெள்ளை கண்ணு சிவா சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img