கோயம்புத்தூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக செயல்படும் கோயம்புத்தூர் ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2024-2025-ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி (DCM) சேர்க்கை நடைபெறுகிறது.
பயிற்சிகாலம் ஒரு வருடம் ஆகும்.
இதில் 10, 12, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பில் தேர்ச்சி
பெற்றவர்கள் சேரலாம். 01.08.2024 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. 10.06.2024 முதல் 19.07.2024 மாலை 05.00 மணி வரை அதிகாரபூர்வ இணையதளமான www.tncu.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.100 ஐ இணையவழி மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து (Application Printout Copy) மற்றும் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) மேலாண்மை நிலையத்திற்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.