fbpx
Homeபிற செய்திகள்கரூரில் அமைக்கப்பட்டு வரும் 25 புதிய குளங்கள்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கரூரில் அமைக்கப்பட்டு வரும் 25 புதிய குளங்கள்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கரூர் மாவட்டம் தோகை மலை ஊராட்சி ஒன்றியம் கூடலூர் ஊராட்சி கண்ணூத்துமடையில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டு வரும் குளத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் செய் தியாளர் பயணத்தின் போது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியதாவது:

பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசால் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய திட்டங்கள் தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் வெள்ளி யணை வழியாம்புதூர் வடக்குப் பகுதியில் ரூ.13.18 லட்சம் மதிப்பீட்டிலும், வெள்ளியணை வழியாம்புதூர் தெற்குப் பகுதியில் ரூ.16.67 லட்சம் மதிப்பீட்டிலும், கோயம்பள்ளி ஊராட்சியில் ரூ.16.67 லட்சம் மதிப்பீட்டிலும், புத்தாம்பூர் ஊராட்சி வடுகப்பட்டி மேற்கு பகுதியில் ரூ.5.70 லட்சம் மதிப்பீட்டிலும், மணவாடி ஊராட்சி அய்யம்பாளையத்தில் ரூ.6.84 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.51.87 லட்சம் மதிப்பீட்டில் 5 புதிய குளங்களும், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் துக்காச்சி ஊராட்சி வேலாயுதம் பாளையத்தில் ரூ.24.75 லட்சம் மதிப்பீட்டிலும், தென் னிலை மேற்கு ஊராட்சி அரிக்காரன்பாளையத்தில் ரூ.24.23 லட்சம் மதிப்பீட்டிலும், கோடந்தூர் ஊராட்சி வடகரை பகுதியில் ரூ.26.77 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.75.75 லட்சம் மதிப்பீட்டில் 3 புதிய குளங்களும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் மணவாசி மயானம் அருகில் ரூ.8.78 லட்சம் மதிப்பிலும், மாயனூர் காரஞ்சி களம் அருகில் ரூ.2.89 லட்சம் மதிப்பீட்டிலும், பன்னீர்பட்டி கல்லாங்குத்து அருகில் ரூ.2.61 லட்சம் மதிப்பீட்டிலும், சித்தல வாய் ஊராட்சி மேலடையில் ரூ.3.29 லட்சம் மதிப்பீட்டிலும், என மொத்தம் ரூ.17.57 லட்சம் மதிப்பீட்டில் 4 புதிய குளங்களும்,
கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுக்காம்பட்டியில் ரூ.15.00 லட்சம் மதிப்பீட்டிலும், சுருமான்பட்டியில் ரூ.15.00 லட்சம் மதிப்பீட்டிலும், எழுவக்கரியூரில் ரூ.9.59 இலட்சம் மதிப்பீட்டிலும், கஸ்தூரி குரும்பப்பட்டியில் வடவம்பாடியில் ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டிலும், ஓனாப் பாறைப்பட்டியில் ரூ.12.70 லட்சம் மதிப்பீட்டிலும், சின்ன தேவன்பட்டியில் ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டிலும், பாரப்பட்டி வடக்கு பகுதியில் ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.95.19 லட்சம் மதிப்பீட்டில் 7 புதிய குளங்களும், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் தம்மநாயக்கன்பட்டியில் ரூ.13.03 லட்சம் மதிப்பீட்டிலும், சீத்தப்பட்டியில் 5.10.14 லட்சம் மதிப்பீட்டிலும், பால்வார்பட்டியில் ரூ.20.51 லட்சம் மதிப்பீட்டிலும் என ரூ.43.68 லட்சம் மதிப்பீட்டில் 3 புதிய குளங் களும், தோகைமலை ஊராட்சி ஒன்றியம் கண்ணூத்துப்பட்டி கண்ணூத்துமடையில் ரூ.18.87 லட்சம் மதிப்பீட் டிலும், கள்ளை களர்பட்டியில் ரூ.10.67 லட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.29.54 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய குளங்களும் என மொத்தம் 6 ஊராட்சி ஒன்றியங்களில் 25 புதிய குளங்கள் ரூ.3.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது குளித் தலை வருவாய் கோட்டாட்சியர்
தனலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமேஸ் வரன், ராஜேந்திரன், செய்தியாளர்கள் மற்றும் தொடர்புடைய அலு வலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img