fbpx
Homeபிற செய்திகள்கண் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மாநாடு துவக்கம்

கண் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மாநாடு துவக்கம்

மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி மகாதேவன் கண் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்கும் ஐஐஆர்எஸ்ஐ 2024 மாநாட்டை துவக்கி வைத்தார்.

இதில் பல்வேறு நாடுகளிலிருந்து 4000க்கும் மேற்பட்ட கண் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் கண்களில் லென்ஸ் உள்வைப்பு (IOL) மற்றும் லேசிக் & ஒளிவிலகல் அறுவை சிகிச்சை ஆகிய துறைகளை சார்ந்த 50 மருத்துவ நிபுணர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

ஐஐஆர்எஸ்ஐ தலைவர் டாக்டர் ஜகத் ராம், பொதுச் செயலாளர் பேராசிரியர் டாக்டர் அமர் அகர்வால் ஆகியோர் இத்தொடக்கவிழா நிகழ்வில்  முன்னிலையில் வகித்தனர். நாடு முழுவதும் உள்ள கண் மருத்துவர்கள் பயன்பெறும் வகையில் கண் பராமரிப்பு மற்றும் அறுவை சிகிச்சையில் சமீபத்திய முன்னேற்றங்களை மேம்படுத்துவது இந்த மாநாட்டில் பேசப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img