திருச்சூர் அருகே அதிரப்பள்ளி மலக்கபார சாலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து நின்ற கபாலி காட்டு யானை.
கேரள மாநிலம் திருச்சூர் அதிரப்பள்ளி மலக்கப்பாரா பகுதியில் அதிக அளவில் காட்டு யானைகள் வசித்து வருகிறது.
இந்த நிலையில் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கபாலி காட்டு யானை சாலையில் உலா வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது
இந்த நிலையில் இன்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கபாலி காட்டு யானை அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து நின்றது
ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் வழிமறித்து காட்டு யானை கபாலியால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்தனர்