fbpx
Homeபிற செய்திகள்கோவையில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எஸ்.பி.வேலுமணி நிதியுதவி

கோவையில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எஸ்.பி.வேலுமணி நிதியுதவி

கோவையில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், நிதி உதவியும் வழங்கினார் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அட்டுகல் பகுதியை சேர்ந்த தேவராஜ் என்ற கூலி தொழிலாளி கடந்த 13 ஆம் தேதி அதிகாலை இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் அப்பகுதியில் இருட்டில் நின்றுகொண்டு இருந்த யானை தீடீரென தேவராஜை தாக்கியதில் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார்.

உயிரிழந்த தேவராஜின் குடும்பத்தினரை முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி நேரில் சதித்து ஆறுதல் தெரிவித்தார். நிதி உதவியும் வழங்கினார்.

அதேபோல் கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விராலியூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் 24 வயது இளைஞர் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறையினருடன் இனைந்து ஊருக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென யானை கார்த்திக்கை தாக்க துவங்கியது. இதில் படுகாய மடைந்த கார்த்திக் சிகிச்சை பலனின்றி சம்பவ பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தநிலையில், மகனை இழந்து வாழும் அவரது குடும்பத்தினரை எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினார்

படிக்க வேண்டும்

spot_img