fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலையில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று சிறப்புரை

திருவண்ணாமலையில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று சிறப்புரை

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மூலம் செயல்படுத்தும் (DDU-GKY) தீன் தயாள் உபாத்யாய் கிராமின் கௌசல்ய யோஜனா திட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. இவ்வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசினார்.

இதில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இம்முகாமில் திருவண்ணாமலை, ஆரணி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் திரளானோர் பங்கேற்று பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img