fbpx
Homeபிற செய்திகள்தோட்ட அதிபர்கள் சங்க மாநாட்டில் ஆலைகளுக்கு தங்க தேயிலை விருது

தோட்ட அதிபர்கள் சங்க மாநாட்டில் ஆலைகளுக்கு தங்க தேயிலை விருது

குன்னூரில் நடந்த தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க மாநாட்டில் தங்க தேயிலை விருது வழங்கும் விழாவில் பல்வேறு தேயிலை தொழிற்சாலைகளுக்கு 38 தங்க தேயிலை விருதுகள் வழங்கப் பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் தென்னிந்திய தேயிலை தோட்ட அதி பர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் வெளிநாட்டு வர்த்தகர்கள் பங்கேற்கும் சிறப்பு கண்காட்சி 2 நாட்களாக நடைபெற்றது.

இந்நிலையில் இறுதி நாளாக நடைபெற்ற மாநாட்டில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய தலைவர் தொட்டா வெங்கடசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தங்க தேயிலை விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நீலகிரி மாவட்டம் கோடநாடு, கிரீன் டீ எஸ்டேட் ஏ.வி.டி., சாம்ராஜ், கண்ணன் தேவன், ஹாரிசன் உட்பட பல்வேறு தேயிலை தொழிற் சாலை களுக்கு 38 தங்க தேயிலை விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஏராளமான தோட்ட அதிபர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img