திருப்பூரில் மேற்கு ரோட்டரி, ஸ்ரீயோகாலயா சார்பில் சிறந்த நூல், சிறந்த கல்வி சேவைக்கான விருது வழங்கும் விழா நடந்தது. இதில், கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன வேந்தரும், நிர்வாக அறங்காவலருமான தி.சு.க.மீனாட்சி சுந்தரத்திற்கு கல்வி கொடையாளர் விருது வழங்கப்பட்டது. இதேபோல, மாணவர்களுக்கான வழிகாட்டி விருது ‘பதினைந்தும் புதிது’ என்ற புத்தகத்தை எழுதிய ஐபிஎஸ் அதிகாரி முனைவர் இரா.திருநாவுக்கரசுக்கு வழங்கப்பட்டது.