fbpx
Homeபிற செய்திகள்கோவை தி அட்வர்டைசர்ஸ் கிளப் நடத்திய ஓணம் பூக் கோலப்போட்டி

கோவை தி அட்வர்டைசர்ஸ் கிளப் நடத்திய ஓணம் பூக் கோலப்போட்டி

தி அட்வர்டைசர்ஸ் கிளப் கோய முத்தூர் சார்பாக தொடர்ந்து கலை திறன்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருவோணத்தை முன்னிட்டு ஓணம் பூக்கோலம் போட்டோ கான்டெஸ்ட் போட்டி ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்றது.

இதில் சுமார் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தாங்கள் வீடுகளில் இட்ட பூக்கோலங்களை போட்டோ எடுத்து அனுப்பினர். இதில் 18 கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் இருந்து சிறந்த மூன்று கோலங்கள் தேர்வு செய்யப்பட்டது..
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் விழா கோவை இந்திய வர்த்தக சபை அரங்கில் நடைபெற்றது.

தி அட்வர்டைசர்ஸ் கிளப் கோயமுத்தூர் தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்டே ஃப்ரெஷ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீராம் மாதவன்பேங்க் ஆப் ,மகாராஷ்டிரா வங்கியின் துணை மண்டல மேலாளர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த பூக்கோலமிட்ட பெண்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.இதில் மூன்றாவது பரிசாக இரண்டு பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தி அட்வர்டைசர்ஸ் கிளப் கோயமுத்தூர் செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ் நாயர், வினோத் ஆகியோர் ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியில் ,செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ஜெயகுமார், இணை செயலாளர் டேவிட் அப்பாதுரை உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img