fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலை பௌர்ணமி கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி சிறப்பு விற்பனையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை பௌர்ணமி கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி சிறப்பு விற்பனையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், நேற்று திருமஞ்சன கோபுரத் தெருவில் அமைந் துள்ள பௌர்ணமி கோ- ஆப் டெக்ஸின் தீபாவளி 2024 சிறப்பு விற்பனையை குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை பௌர் ணமி கோ- ஆப்டெக்ஸ், சென்ற ஆண்டு தீபாவளியில் சுமார் ரூபாய் 92.36 இலட்சம் அள விற்கு சில்லறை விற்பனை செய் தது. இதன் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பும் அளித்து வரு கிறது.
இந்த வருட தீபாவளி 2024க்கு ரூபாய் 1.35 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கைத்தறி ரகங்களின் விற்ப னையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் பண்டிகை காலங்களில் 30% சிறப்பு தள்ளுபடி வழங்கி வரு கிறது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த பாரம்பரிய மிக்க நெசவுத் தொழிலில் நவீன உக்திகளை கையாண்டு அரிய வேலைப்பாடுகளுடன் எழில் கொஞ்சும் வண்ணக் கலவைக ளில் பட்டு மற்றும் கைத்தறி இரக சேலைகள் புதிய வடி வமைப்பில் ஆர்கானிக் மற்றும் களங்காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் நேர்த்தியான வண்ணங்களில் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் பருத்தி இரக சேலைகள், லுங்கிகள், போர்வைகள், திரைச்சீலைகள், துண்டுகள், கைக்குட்டைகள், வேட்டிகள், ரெடிமேட் சட்டைகள், குர்தீஸ் மற்றும் எண்ணற்ற இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வாடிக் கையாளர்களின் அமோக ஆத ரவைப் பெற்று வருகிறது. இவ் வாண்டு புதிய இரக வரவுகளாக, ட்வில் வீவ் ஆயத்த சட்டைகள், ஸ்லப் காட்டன் சட்டைகள், டிசை னர் காட்டன் சேலைகள் என பல புதிய இரகங்கள் விற்ப னைக்கு உள்ளன.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ஏற்றுமதி இரங்களான ஏப் ரான், குல்ட், மெத்தைகள், கையுறைகள், டேபுள்மேட், ஸ்கிரின் துணிகள் தலையனை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் வாடிக்கையாளர் களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் 56% கூடுதல் பலன் உள்ளதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோ ஆப்டெக்ஸ் மாதந்திர சேமிப்புத் திட்டத்தில் உறுப்பினராக இருந்து வருகின்றனர். கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தற்போது ஷ்ஷ்ஷ்.நீஷீஷீஜீtமீஜ்.ரீஷீஸ்.வீஸீ என்ற இணைய தளத்தின் மூலமும் ஆன்லைன் விற்பனையை செய்து வருகிறது.

-30% சிறப்பு தள்ளுபடியுடன் அரசு ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் வட்டியில்லா கடன் விற்பனை வசதியை இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்குகிறது. அரசு ஊழியர்கள் கடன் விற்பனை வசதிகளை பயன்படுத்தி தங்க ளுது குடும்பத்திற்கு தேவையான துணி இரகங்களை வாங்கி தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சி யுடன் கொண்டாடவும், மேலும் வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாட்களிலும் விற் பனை நிலையம் செயல்படும். அனைவரும் கைத்தறி ஆடைகளை பயன்படுத்தி நெசவாளர்களுக்கு உதவிடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிகழ்வில் திருவண்ணா மலை மாவட்ட கைத்தறி உதவி இயக்குநர் எஸ்.கார்த்திகேயன், கோ ஆப்டெக்ஸ் மேலாளர் (இரகம் மற்றும் பகிர்மானம்), வேலூர் சு.ஞானபிரகாசம், பௌர்ணமி கோஆப் டெக்ஸ் மேலாளர், திருவண்ணா மலை பா.கோ.தனபால், கோ-ஆப் டெக்ஸ் ஊழியர்கள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img