fbpx
Homeபிற செய்திகள்திமுக சார்பில் 500 பேருக்கு நல உதவிகள்

திமுக சார்பில் 500 பேருக்கு நல உதவிகள்

காவேரிப்பட்டணம் அடுத்த தளி அள்ளி ஊராட்சியில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 71வது பிறந்த நாளையொட்டி 71 அடி உயரகொடி கம்பம் ஏற்றும் விழா, மற்றும் 500 பேருக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமை தாங்கினார்.ஒன்றிய செயலாளர் க.மகேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் கலந்து கொண்டு 500 பேருக்கு வீட்டிற்கு தேவையான ஹாட் பாக்ஸ், மற்றும் நல திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், பொருளாளர் கதிரவன், பேரூராட்சி செயலாளர்கள் தம்பிதுரை, பாபு, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம் முன்னாள் எம்எல்ஏ வி.சி. கோவிந்தசாமி, கழகப் பிரமுகர்கள் அன்பரசு கே வி.எஸ். சீனிவாசன், ஊராட்சி தலைவர்கள் ராமமூர்த்தி ,ரமேஷ், ஆனந்தன், சுப்பிரமணி, குமார், ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினர் நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ் நன்றி கூறினார்..விழாவிற்கான ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் மகேந்திரன் செய்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img