கோவை அரசூரில் உள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
கல்லூரி தொடங்கியது முதல் கடந்த ஆண்டு வரை படித்து முடித்த அனைத்து முன்னாள் மாணவர்களும் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றனர்.
கேபிஆர் குழுமத்தின் தலைவர் முனைவர் கே.பி.ராமசாமி தலைமையில் சிறப்பு விருந்தினர் ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெருநிறுவன உறவுகள் டீன் மகேஷ் பஞ்சாக்னுலா மற்றும் கல்லூரி முதல்வர் சரவணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
மேலும் பத்தாண்டுகள் நிறைவடைந்த முன்னாள் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. முன்னதாக மரக்கன்று நடுதலோடு தொடங்கிய நிகழ்ச்சியில் கல்லூரியின் வளர்ச்சியில் முன்னாள் மாணவர்கள் ஈடுபடுதல் பற்றிய குழு விவாதம் நடைபெற்றது. மேலும் முன்னாள் மாணவர்களைக் கவரும் வகையில் விளையாட்டுகள் மற்றும் அரங்குகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.