fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரம் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் “ஸ்வச்சதா ஹி சேவா-2024” தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்...

சிதம்பரம் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் “ஸ்வச்சதா ஹி சேவா-2024” தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைப்பணி

சிதம்பரம் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் “ஸ்வச்சதா ஹி சேவா-2024” தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணி மேற்கொள்ளும் நிகழ்ச்சி சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதற்கு சிதம்பரம் பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர் ரமேஷ் மற்றும் மேலாளர் சரவணகுமார் ஆகியோர்கள் தலைமை தாங்கினார்கள்.

மேலும் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள், அரசு நந்தனார் பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் எழிலரசி, உதவி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் பள்ளியின் நாட்டு நல பணி திட்ட அலுவலர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கிடந்த குப்பைகளை அகற்றி தூய்மை பணியை மேற்கொண்டனர். மேலும் அனைவரும் தூய்மை பாரத உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். முடிவில் உடன் கல்வி இயக்குனர் கலா ராணி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img