fbpx
Homeபிற செய்திகள்உதகை கதர் அங்காடி தீபாவளி விற்பனையை துவக்கி வைத்த ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு

உதகை கதர் அங்காடி தீபாவளி விற்பனையை துவக்கி வைத்த ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு

மகாத்மா காந்தியடிகளின் 155வது பிறந்தநாள் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உதகையில் இயங்கி வரும் கதர் அங்காடியில் சிறப்பு தள்ளூபடி விற்பனையை மாவட்ட ஆட்சி தலைவர் துவக்கி வைத்தார்.


அண்ணல் காந்தியடிகளின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இதனை தொடர்ந்து உதகையில் இயங்கி வரும் கதர் அங்காடியில் காந்தியடிகளின் பிறந்தநாள் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

இந்தாண்டு நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு ரூ.433.00 கோடி மதிப்பிற்கு கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியாக கதர், பட்டு, பாலியஸ்டர் ஆகிய பொருட்களுக்கு 30 கதவீதமும், உல்லன் பொருட்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து அரசுத்துறை அலுவலர்களும், பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் கதர் துணி ரகங்களை வாங்கி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img