fbpx
Homeபிற செய்திகள்உணவுத் திருவிழாவில் சிறு தானிய உணவுப்பொருட்கள் கண்காட்சி திருவண்ணாமலை கலெக்டர் பார்வையிட்டார்

உணவுத் திருவிழாவில் சிறு தானிய உணவுப்பொருட்கள் கண்காட்சி திருவண்ணாமலை கலெக்டர் பார்வையிட்டார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் திட்டத்தின் சார்பாக நடைபெற்ற சிறு தானிய உணவு திருவிழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக அமைக்கப்பட்டிருந்த சிறு தானிய உணவுப் பொருட்களின் கண் காட்சியினை பார்வை யிட்டார்.பாராம்பரிய உணவு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் மகளிர் திட்டத்தின் சார்பாக 25 மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பாராம்பரிய உணவுப்பொருட்களை கொண்டு பல்வேறு வகையான பாரம்பரிய உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

குறிப்பாக பாரம் பரிய அரிசி வகையில் செய்யப்பட்ட உணவு வகைகள், சிறு தானியங்களில் செய்யப் பட்ட தோசை மற்றும் இட்லி வகைகள், தூதுவளை உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளில் செய்யப்பட்ட துவைய ல்கள், கேழ்வரகு, திணை உள்ளிட்ட சிறு தானியங்களால் செய்யப்பட்ட லட்டு, கொழுக்கட்டை, சுண்டல் வகைகள் என பல்வேறு உணவு வகைகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு மகளிர் சுயஉதவிக்குழுவினரை பாராட்டினார்.

படிக்க வேண்டும்

spot_img