fbpx
Homeபிற செய்திகள்காந்தி சிலைக்கு எம்பி கோபிநாத் தலைமையில் காங்கிரசார் மரியாதை

காந்தி சிலைக்கு எம்பி கோபிநாத் தலைமையில் காங்கிரசார் மரியாதை

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்., கமிட்டியின் சார்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பழையபேட்டை காந்தி சிலைக்கு காங்., எம்.பி., கோபிநாத் தலைமையில், காங்., கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பாதயாத்திரையை எம்.பி., துவக்கி வைத்து கலந்து கொண்டார்.

இந்த பாதயாத்திரை காந்திசாலை, ரவுண்டானா வழியாக ராசுவீதி வரை சென்றனர். அங்கு காமராஜர் நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு எம்.பி., தலைமையில் காங்., கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் ரகமத்துல்லா வரவேற்றார்.

முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாகுமார வேல், நகர தலைவர் வலித் ஆண்டனி, துரைசாமி, மாவட்ட துணைத் தலைவர் சேகர், ஆடிட்டர் வடிவேல், மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, மாநில செயலாளர் ஆறுமுகம், அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் குமரேசன், நகர் மன்ற உறுப்பினர் விநாயகம், வட்டாரத் தலைவர்கள் ரமேஷ் அர்னால்ட், திருமால், தனஞ்செயல், யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜேசு துரைராஜ், நாராயணமூர்த்தி, சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் ஜாவித்கான், சாதிக்கான், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சபிக் அகமத், டாக்டர் தகி, ஷாநவாஸ், மனித உரிமைத்துறை நாகராஜன், மாவட்ட செயலாளர் சரவணன், வட்டாரத் தலைவர் சித்திக், முன்னாள் நகர் மன்ற தலைவர் முபாரக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img