fbpx
Homeபிற செய்திகள்மறைந்த பாப்பம்மாள் பாட்டி திருவுருவ படத்திற்கு நீலகிரி எம்பி ஆ.ராசா மரியாதை

மறைந்த பாப்பம்மாள் பாட்டி திருவுருவ படத்திற்கு நீலகிரி எம்பி ஆ.ராசா மரியாதை

மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பத்மஸ்ரீ விருது பெற்ற தேக்கம்பட்டி இயற்கை விவசாயி பாப்பம்மாள் பாட்டி உடல்நல குறைவு காரணமாக காலமானார். இயற்கை விவசாயத்தில் நாட்டம் கொண்ட பாப்பம்மாளுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது.

மேலும், திமுகவில் மூத்த முன்னோடியாக இருந்து வந்த பாப்பம்மாள் பாட்டிக்கு கடந்த செப்.17ஆம் தேதி திமுக சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் தந்தை பெரியார் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த நீலகிரி எம்பியும்,திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா உடல்நலக்குறைவால் காலமான பாப்பம்மாள் பாட்டியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

அப்போது,கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.சண்முகசுந்தரம், அஷ்ரப் அலி, ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரன், எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு, காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ், சிறுமுகை பேரூர் கழக செயலாளர் உதயகுமார், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ராமுகுட்டி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை தலைவர் மனோகரன்,மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் திலீப்,ஒன்றிய துணைச்செயலாளர் அம்மன் துரை உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img