fbpx
Homeபிற செய்திகள்தடுப்பணை கட்டும் பணியை ஆய்வு செய்த மார்கண்டேயன் எம்எல்ஏ

தடுப்பணை கட்டும் பணியை ஆய்வு செய்த மார்கண்டேயன் எம்எல்ஏ

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், கொல்லம்பரம்பு குளத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டுமான பணியையும், சாலையின் இரு புறமும் கட்டப்பட்டு வரும் தடுப்பு சுவர் பணியையும் கடந்த வருடம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கரையை மேம்படுத்தி சீரமைக்கும் பணியினையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பணியை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வில் ஓட்டப்பிடாரம் துணை பெருந்தலைவர் காசி விஸ்வநாதன், கொல்லம்பரம்பு ஊராட்சி மன்ற தலைவர் கௌரிகருணாகரன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், சந்திரகிரி ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி சந்தனராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி, கிளைச் செயலாளர்கள் ராமசாமி, லட்சுமணன், பிரதிநிதி மாரிமுத்து, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img