fbpx
Homeபிற செய்திகள்சேலத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

சேலத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

சேலம் மாவட்டம், தலைவா சல் ஊராட்சி ஒன்றியப் பகுதிக ளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி நேற்று செய்தியாளர் பயணத்தின் போது நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், ஊராட்சி பொது வளர்ச்சி நிதி, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், 15வது ஒன்றிய நிதிக்குழு, கலைஞர் கனவு இல்லம், நபார்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.182.21 கோடி மதிப்பீட்டிலான 7,128 திட்டப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 5,137 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,991 பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில், தலைவாசல் ஊராட்சி ஒன்றியம், காட்டுக்கொட் டாய் ஊராட்சியில் ரூ.22 லட் சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் பொது நூலகத் தில் ஆய்வு மேற்கொண்டு பணி களை விரைவாக முடித்திட அறி வுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மணிவிழுந்தான் ஊராட்சி மற்றும் கோவிந்தம்பாளையம் ஊராட் சிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளையும், மணிவிழுந்தான் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் இராமானுஜபுரம் முதல் ஊத்தங்கரை வரை ரூ.77.81 லட்சம் மதிப்பீட்டில் நடை பெற்றுவரும் சாலைப் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணி களை விரைவாகவும் உரிய தரத்திலும் முடிக்குமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளது.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆறகளூர் மற்றும் சித்தேரி ஊராட்சிகளுக்கு தலா ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடப் பணிகளையும், சித்தேரி ஊராட்சி, அய்யனார் கோவில் அருகே ரூ.9.70 லட்சம் மதிப்பீட்டிலும், காமக்காபாளையம் ஊராட்சி, நெடுமேடு பகுதியில் ரூ.14.96 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக குளங்கள் அமைக்கப்பட்டுவரும் பணிகளும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கோவிந் தம்பாளையம் ஊராட்சியில் கிராமப்புற வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் பழுது பார்க்கும் பணிகள், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பாகடப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.32.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுவரும் இரண்டு புதிய வகுப்பறைக் கட்டடப் பணிகள் உட்பட தலைவாசல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் மேற்கொள் ளப்பட்டுவரும் 23 வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img