உதகை சேரிங் கிராஸ் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியா கராஜன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப் போது காவல்துறையில் பணி புரிவோர் தங்களது சொந்த வாகனங்களில் ஒட்டப்பட்டு இருந்த போலீஸ் , முன்னாள் ராணுவத்தினர் வாகனங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் Ex ARMY, செய்தித்துறையில் பணிபுரிபவர்களில் வாகனங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் PRESSபோன்ற வாசக ஸ்டிக்கர்கள், முகப்பு கண்ணாடி மற்றும் நம்பர் பிளேட்டுகளில் ஒட்டப்படக் கூடாது என கூறியதோடு அந்த ஸ்டிக்கர்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அகற்றினார்.
எதிர்வரும் நாட்களில் மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் இந்த ஆய்வு தொடரும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கூறினார். கடந்த சில நாட்களாக சொந்த வாகனங்களில் தாங்கள் பணிபுரியும் நிறுவ னங்கள் மற்றும் தொழில் சார்ந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருப்பதால் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.