fbpx
Homeபிற செய்திகள்ஏடிஎம் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் பணிக்கு திரும்பினார் உற்சாக வரவேற்பு

ஏடிஎம் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் பணிக்கு திரும்பினார் உற்சாக வரவேற்பு

குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் சிகிச்சைக்கு பின் பணிக்கு திரும்பியதும், சக போலீசார் மற்றும் பொதுமக்கள் உற்சாக வர வேற்பளித்தனர்.

கேரளா ஏ.டி.எம். கொள்ளை நபர்களை பிடிக்கும் சம்பவத்தில் பலத்த காயமடைந்த குமார பாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, பரமத்தி எஸ்.ஐ. ரஞ்சித் ஆகியோர் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இரு நாட்கள் முன்பு வீடு திரும்பினர். நேற்று முன்தினம் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இவருக்கு சக போலீசார் உற்சாக வரவேற்பளித்தனர். ஆரத்தி எடுத்தும், மலர்கள் தூவியும், பொன்னாடை அணிவித்தும் உற்சாக வரவேற்பளித்தனர். நகரின் பொதுமக்கள் பலரும் நேரில் சந்தித்து, இன்ஸ்பெக்டர் சாதனைக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தினர்.

இன்ஸ்பெக்டர் தவ மணி கூறுகையில், இந்த சம்பவத்தில் இறைவன் அருளால், எல்லோரின் அன்பால், உடன் பணியாற் றிய போலீசாரால், காவல் துறை எஸ்.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகளால் உயிர் பிழைத்து வந்துள்ளேன். எல்லோரின் அன்பும், ஆதரவும் இருந்தால் காவல் துறையில் மேலும் சாதிப்பேன், என்றார்.

படிக்க வேண்டும்

spot_img