fbpx
Homeபிற செய்திகள்கானாப்பட்டி அரசு பள்ளியில் 100 மரக்கன்றுகள் நடுதலை எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் துவக்கி வைத்தார்

கானாப்பட்டி அரசு பள்ளியில் 100 மரக்கன்றுகள் நடுதலை எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் துவக்கி வைத்தார்

தேசிய பசுமைப்படை சார்பில் 100 பல்வகை மரக்கன்றுகள் நடும் விழாவில் தருமபுரி சட்டமன்ற உறுப் பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பங் கேற்று மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாலவாடி ஊராட்சி, கானாப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில் 100 பல்வகை மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது. மரக்கன்றை நட்டு தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் சுமதி, பாமக மாநில துணை தலைவர் பெ.சாந்தமூர்த்தி, மாநில செயற்குழு உறுப் பினர் பெ.பெரியசாமி, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆறு முகம், தேசிய பசுமைப் படை பொறுப்பாளர்கள் சின்னசாமி, தாமோதிரன், அல்லி முத்து, புலவர் கிட்டம், ஊர் கவுண்டர் மணிவாசகம், ஒன்றிய பொறுப்பாளர் சிவாஜி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், மாணவர்கள், ஊர்பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img