fbpx
Homeபிற செய்திகள்விபத்தில்லா தீபாவளியை கொண்டாட சேலம் தீயணைப்புத்துறை விழிப்புணர்வு

விபத்தில்லா தீபாவளியை கொண்டாட சேலம் தீயணைப்புத்துறை விழிப்புணர்வு

நாடு முழுவதும் வரும் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தீ விபத்து ஏதும் இல்லாமல் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பான முறையில் கொண்டாட வலியுறுத்தி சேலம் மாநகர் செவ்வாய்பேட்டை பகுதியில் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

பட்டாசு வெடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், உடனடியாக அழைக்க வேண்டிய அவசர உதவி எண்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை சேலம் மாவட்ட தீயணைப்புத்துறை உதவி அலுவலர் சிவக்குமார் தலைமையிலான அலுவலர்கள் விநியோகித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img