கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் “நான் முதல்வன் திட்டத்தின்” கீழ் நடத்திய உணவு பகுப்பாய்வு, தரக் கட்டுப்பாடு மற்றும் தர ஆராய்ச்சி பாடத் திட்டத்தின், அதிகாரபூர்வ பயிற்சி பங்களிப்பாளர் “RAREMIND நிறுவனம் நடத்திய சிறப்பு வகுப்புகளில் வெற்றி பெற்ற “HACKATHON” வெற்றியாளர்களுக்கு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதில் “RAREMIND” நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.சுபாஷிணி தலைமை வகித்தார். வடவள்ளி பகுதி திமுக செயலாளர் வ.ம. சண்முகசுந்தரம், பாரதியார் பல்கலைக்கழக பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர் சரஸ்வதி புஷ்பராஜ், மாநகர் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், நெசவாளர் அணி வி.மணி, இலக்கிய அணி ராஜ்குமார், 38வது வட்டக் கழகச் செயலாளர் தெய்வம் மகாலட்சுமி, 36வது வட்டக் கழகச் செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் சதாசிவம், சின்னத்தங்கம், வடக்கு மாவட்ட அணி நிர்வாகி வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.