fbpx
Homeபிற செய்திகள்சின்னக்கானூர் அரசு பள்ளியில் நூலகம் துவக்கம்

சின்னக்கானூர் அரசு பள்ளியில் நூலகம் துவக்கம்

கோவை அன்னூரில் உள்ள சின்னக்கானூர் ஆரம்பப்பள்ளியில் தோழர்களின் கரம் அறக்கட்டளையின் கற்கை நன்றே திட்டத்தின் கீழ் 9வது நூலகம் வெற்றிகரமாக அமைக்கப்பட்டது. இதற்கான விழா அப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 600-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் ஒரு நூலக அலமாரி வழங்கப்பட்டது.

மாணவர்களின் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்து அறிவை விரிவுபடுத்தும் முயற்சியாக நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் புத்தக வாசிப்பு மேம்பாட்டின் முன்னெடுப்பின் பிரதிபலிப்பே இந்தத் திட்டம் என நிகழ்வில் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img