fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மாநகராட்சி பள்ளி மாணவர் தேசிய அளவிலான வாள் சண்டைக்கு தேர்வு

திருப்பூர் மாநகராட்சி பள்ளி மாணவர் தேசிய அளவிலான வாள் சண்டைக்கு தேர்வு

திருப்பூர் சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர் அஸ்பின் மத்திய அரசின் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தால் நடத்த பெறும் தேசிய அளவிலான வாள் சண்டை போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தமிழகத்தின் சார்பாக வரும் நவம்பர் 17 முதல் 21ம் தேதி வரை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
திருப்பூர் மாவட்ட மாநகராட்சி பள்ளியில் இருந்து தேசிய அளவிலான வாள் சண்டை போட்டியில் கலந்து கொள்ளும் முதல் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இம்மாணவர் மாநில அளவில் சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவருக்கு தலைமை ஆசிரியர் சுந்தரராஜ், உதவி தலைமை ஆசிரியர்கள் சரவணகுமார், செலின் ராணி, சாந்தா மணி மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவி சகாயமேரி மற்றும் உறுப்பினர் அம்பலவாணன், உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன், வாள் சண்டை பயிற்றுனர் மயில்சாமி ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img