fbpx
Homeபிற செய்திகள்தமிழக கைப்பந்து அணிக்கு வேளாளர் பள்ளி மாணவி கனிஷ்கா தேர்வு

தமிழக கைப்பந்து அணிக்கு வேளாளர் பள்ளி மாணவி கனிஷ்கா தேர்வு

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் போட்டிக்காக நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து தெரிவுப் போட்டியில் வேளாளர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி எஸ்.டி.கனிஷ்கா தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டு, 24.11.24 முதல் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார்.
மாணவி எஸ்.டி. கனிஷ்காவை பள்ளியின் தாளாளர் எஸ்.டி. சந்திரசேகர், பள்ளியின் முதல்வர் செல்வி வெ. லதா ஒருங்கிணைப்பாளர் வி.சித்ரா, உடற்கல்வி ஆசி ரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியைகள் அனைவரும் பாராட்டிக் கௌரவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img