கலசலிங்கம் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலத் துறை, கலை மற்றும் சிறப்பு கல்விப் பள்ளி சார்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு “ மனிதவியல் மற்றும் சமூக அறிவியலில் புதிய மாற்றங்கள் “ (ஐசிஇபிஹெச்எஸ்எஸ் ‘25) வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த், துணை வேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன் ஆகியேர் சிறப்புரை நிகழ்த்தினர்.
ஆராய்ச்சி துறை இயக்குநர் முனைவர் எம்.பி.பள்ளிகொண்ட ராஜசேகரன் வரவேற்றுப் பேசினார். கலை மற்றும் சிறப்பு கல்விப் பள்ளித் தலைவர் முனைவர் வி.பாண்டியராஜன் மாநாட்டின் நிகழ்ச்சிகளை விளக்கினார்.
அமெரிக்கா, ஜேம்ஸ் மேடிசன் பல்கலைக்கழக, முனைவர் சுஹில் மித்தல் மாநாட்டைத் துவக்கி வைத்து “மாநாட்டு கட்டுரை மலரை” வெளியிட்டார்.
இங்கிலாந்து, லண்டன், பாத் பல்கலை பேராசிரியர் சாமந்தா கர்லே, மலேசியா, தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் கார்த்தியாயினி சுப்ரமணியன், சவுதி அரேபியா, அராப் திறந்த வெளி பல்கலைக்கழக பேராசிரியர் சாஹ்ரா பெலூஃபா, பாண்டிச்சேரி பல்கலை பேராசிரியர் டி. மேட்ரிக்ஸ், கேரளா நிர்மலா கல்லூரி பேராசிரியர் ஜாஸ்மின் ஜோஸ், மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் ஜே.ஜான் சேகர் ஆகியோர் தங்கள் கலை, அறிவியல் ஆராய்சிகள் பற்றி பேசினர்.
மொத்தம் 200 ஆய்வு கட்டுரைகள் பல்வேறு நாடுகளிலிருந்தும் சமர்ப்பிக்கப்பட் டன. ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் பி.ஆர்.அரவிந்த் நன்றி தெரிவித்தார்.
மாநாட்டு ஏற்பாடுகளை பேராசிரியர்கள் எஸ்.ரமாதேவி, ஏ.ஹரிஹர சுதன், மற்றும் கலை மற்றும் சிறப்புக் கல்வி துறையின் அனைத்து பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.