வி.ஐ.டி சென்னையில் பல்கலைக்கழக தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வி.ஐ.டியின் நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். விஐடியின் துணை தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக ஆஸ்திரேலிய துணை தூதரக அதிகாரி கேத்ரினா நேப், டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனித வள மேம்பாட்டு அதிகாரி (நியமிக்கபட்ட) சுதீப் குன்னுமால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வி.ஐ.டி சென்னையின் இணை துணைவேந்தர் முனைவர் டி.தியாகராஜன் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
சிறப்பு விருந்தினர் கேத்ரினா நேப் பேசுகையில், “இந்தியாவும் ஆஸ்திரே லியாவும் கல்வியில் வலுவான தொடர்பை கொண்டுள்ளன. இதற்காக இரு நாட்டு அரசுகளும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இதன்படி, ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி பயில வருகின்றனர்.
தற்போது 1 லட்சம் இந்திய மாணவர்கள் கல்வி பயின்று கொண்டிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் பாடத்திட்டம் தொழில்துறைக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார் செய்து வருகிறது. உலகம் வேகமாக மாறி வருகிறது.
இன்று மாணவர்களாகிய நீங்கள் வளர்த்துக் கொள்ளும் திறன்கள் உங்கள் எதிர்காலத்தை வடிவ மைக்கும். அனைவரும் செல்லும் பாதையை தவிர்த்து புதிய பாதையை தேர்ந்தெடுப்பதற்கு பயப்பட வேண்டாம். சவால்களை வெற்றிக்கர மாக சந்தித்து வாழ்வில் முன்னேறுங்கள்” என்றார்.
விழாவில், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, “இந்தியாவில் உயர்கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதம் 28 சதவிகிதம். ஆனால், பல நாடுகளில் இது 70 முதல் 80 சதவிகிதமாக உள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியாவில் இது 100 சதவிகிதமாக உள்ளது, அந்த நாடுகள் எவ்வாறு உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கி ன்றன என்று நாம் கற்க வேண்டும். அந்நாடு களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவிகிதத்துக்கும் அதிக மாக கல்விக்காக செலவு செய்கின்றனர், என்றார்.
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனித வள மேம்பாட்டு அதிகாரி (நியமிக்கபட்ட) சுதீப் குன்னுமால் பேசும்போது” பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட கடின உழைப்புக்கு அங்கீகாரமாக தான் தற்போது மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களும் ஆசிரிய ர்களும் ஒண்றியணைந்து முயற்சித்தால் பலவற்றை சாதிக்கலாம். விஐடி மாணவர்கள் உங்களுடைய ஆசிரியர்களுக்கும் பல்கலைக்கழகத்துக்கும் பெருமை சேர்ப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
வகுப்பில் சிறந்து விளங்கிய மாணவ, மாண விகளுக்கும், விளையா ட்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கும், 100 சதவிகிதம் வருகை பதி வேடு கொண்ட மாணவ, மாணவிகளுக்கும் விருதுகள் மற்றும் பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மொத்தம் பரிசுத் தொகை ரூ.60 லட்சமாகும். விழாவில், வி.ஐ.டி சென்னையின் கூடுதல் பதிவாளர் முனைவர் பி.கே. மனோகரன், பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.