fbpx
Homeபிற செய்திகள்பாஷ் நிறுவன சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் 10 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு அரசிடம்...

பாஷ் நிறுவன சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் 10 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு அரசிடம் ஒப்படைப்பு

பாஷ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) திட்டத்தின் கீழ் 10 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு, அவை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிகழ்வு கோவை, அவினாசி சாலையில் உள்ள தி கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த திட்டத்தின் மூலம், மருத்துவ மையங்களின் கட்டமைப்பு மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் கொடுக்கப்பட்டன, இதன் மூலம் கிராமப்புறங்களில் மக்கள் தரமான சுகாதார சேவை களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வால்பாறை, சோலையார் நகர், பெரியபோது, மற்றும் டாப்ஸ்லிப், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நெகமம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைகட்டி, மற்றும் காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட காரமடை, சிறுமுகை, வெள்ளியங்காடு மற்றும் சீலியூர் ஆகிய சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டன. இந்த ஒப்படைப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஜி கிரியப்பநவர், மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் பி.பாலுசாமி, பாஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜீஸ், கோவை தலைமை அதிகாரி நவேத் நாராயண், சிஎஸ்ஆர் தலைவர் ஷில்பா, நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஏ.எஸ். சங்கர நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், மருத்துவ அதி காரிகள், மருத்துவர்கள், முக்கிய பங்காளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த முயற்சி, பாஷ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வையும், நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளையின் கிராம மேம்பாட்டு பணிகளையும் வெளிப்படுத்துவதோடு, மக்கள் மேம்பட்ட சுகாதார சேவைகளை பெற உதவுகிறது. புதிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புகளின் மூலம், இந்தியாவின் ஊரக பகுதிகளில் தரமான சுகாதார சேவைகள் பொது மக்களுக்கு சென்றடையும்.

படிக்க வேண்டும்

spot_img