கோவை மாநகர காவல் துறையின் பவள விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று போலீசாருக்கு துப் பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.
கோவை மாநகர காவல் துறை கடந்த 1990ம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் 35 ஆண்டு, பவள விழாவை கொண்டாடும் விதமாக போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் அனைத்து காவல் நிலையங்களும் வண்ண விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பவள விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான பேச்சு போட்டி, ஓவிய போட்டி, வினாடி – வினா, பொதுமக்கள் – போலீஸ் நல்லுறவு கிரிக்கெட் போட்டி, சைக்கிளிங், மருத்துவ முகாம் என வருகிற 26ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. துவக்க நிகழ்ச்சியாக நேற்று காவல்துறையினர் பங்கேற்ற சாலை பாது காப்பு விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.
இன்று கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு துப் பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டி பல்வேறு சுற்று களாக நடைபெற்று 26ம் தேதி நிறைவடைகிறது.