fbpx
Homeபிற செய்திகள்சென்னையில் ஏஎச்பிஐ.,யின் தலைமைத்துவ உச்சி மாநாடு

சென்னையில் ஏஎச்பிஐ.,யின் தலைமைத்துவ உச்சி மாநாடு

இந்திய ஹெல்த்கேர் வழங்குநர்கள் சங்கம் (AHPI) ஆனது சென்னையில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் 2வது AHPI தலைமைத்துவ உச்சி மாநாடு 2024-ஐ நடத்தியது.

இந்நிகழ்வில் டாக்டர் கிரண் பேடி, புதுச்சேரியின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இவரோடு, டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு டாக்டர் ப்ரீத்தா ரெட்டி, அப்போலோ மருத்துவமனையின் நிர்வாக துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் டாக்டர் மாதுரி கனிட்கர், துணைவேந்தர், MUHS மற்றும் டாக்டர் முகமது ரேலா, தலைவர், ரேலா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

AHPI தலைமைத்துவ உச்சிமாநாடு 2024 நிகழ்வில் சிறப்பு விவாதங்கள், கொள்கை சீர்திருத்தங்கள் நடைபெற்றது. இதில் AHPI இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் கிரிதர் கியானி பேசினார்.

அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனர் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டிக்கு “நூற்றாண்டின் ஹெல்த் ஐகான் “ விருது வழங்கப்பட்டது.

KISS, KIMS மற்றும் KIIT பல்கலைக்கழகத்தின் நிறுவனர் பேராசிரியர் (டாக்டர்) அச்யுதா சமந்தா “ஐகானிக் ஹெல்த்கேர் லீடர்” விருது வழங்கப்பட்டது.

மேம்பட்ட செவிலியர் பயிற்சியில் அர்ப்பணிப்புடன் முன்மாதிரியான தலைவரான டாக்டர் டேவிந்தர் கவுருக்கு “செவிலியர் தலைமைத்துவத்தில் முன்மாதிரி” விருது வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img