fbpx
Homeபிற செய்திகள்சாலையோரம் சேர் போட்டு அமர்ந்து அதிமுக கவுன்சிலர் திடீர் போராட்டம்- மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு

சாலையோரம் சேர் போட்டு அமர்ந்து அதிமுக கவுன்சிலர் திடீர் போராட்டம்- மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 22வார்டு பகுதியான பெருமாள் லே அவுட், ஜெகநாதன் லே அவுட்,சுப்பம்மா லே அவுட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சரிவர தூய்மை பணி மேற்கொள்ளாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டு வந்ததாக குற்றச்சாட்டி அந்த பகுதியை சேர்ந்த அதிமுக கவுன்சிலர் ராஜேஷ் ஊர் மக்களுடன் சாலையில் சேர் போட்டு அமர்ந்து ரத்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

காட்டூர் ரயில்வே கேட் அருகே 50க்கும் மேற்பட்டோர் சாலையில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தங்கள் பகுதியில் சாக்கடைகள் தூருவாராமல் அப்படியே உள்ளதால் சுகாதார சீர் கேடு ஏற்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்

பேச்சுவார்த்தையில் உடனடியாக தூய்மை பணிகளை மேற்கொள்ள ஆட்களை நியமித்துள்ளதாகவும் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்

படிக்க வேண்டும்

spot_img