திருப்பூர் மாநகர் மாவட்டம் 19 வட்டம் கொங்கு நகர் பகுதி கழகத்தின் சார்பில் வட்டக் கழக செயலாளர் கனகராஜ் ஏற்பாட்டில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் தலைமையில் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாநகர் மாவட்ட மீனவர் அணி செயலாளர் சாமி கணேஷ், பகுதி கழகச் செயலாளர்கள் பிகேஎம் முத்து, ஹரிஹரசுதன், மற்றும் வட்டக் கழகச் செயலாளர் அர்ஜுனன், நிர்வாகிகள் ராஜேந்திரன் முரளி மனோகரன் தேவராஜ் பூபதி கார்த்திக் பொன்னுச்சாமி ஜெயா மல்லிகா ஜானகி ஆகியோர் பங்கேற்றனர்.