fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல்லில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

நாமக்கல்லில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

போதையால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் பூங்கா சாலையில் இன்று சனிக்கிழமை காலை நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நாமக்கல் பூங்கா சாலையில் இருந்து தொடங்கிய சைக்கிள் பேரணி பரமத்தி சாலை, பேருந்து நிலையம் வழியாக திருச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதையால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தினர்.

படிக்க வேண்டும்

spot_img