பூதங்குடி எஸ் டி சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் வகுப்பு களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சாமுவேல் சுஜின், நிர்வாக இயக்குனர் டாக்டர் தீபா சுஜின் (குழந்தைகள் நல மருத்துவர்) ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்தோணி ராஜ் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக கே.திருமாறன் (மாவட்ட கவுன்சிலர் கடலூர்), ஜே.குணசேகரன் (அரசு வழக்கறிஞர்), எம்.ராஜா (வீட்டு வசதி வாரிய கூட்டுறவு சங்க தலைவர்) ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். விழாவில் மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டையச் சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது.
விழாவில் மழலையர் வகுப்பு மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.