நவராத்திரி தொடக்க தினமான வியாழக் கிழமை சிதம்பரம் நடராஜர் கோயில் கல்யாண மண்டபத்தில் நவராத்திரி கொலு உற்சவத்தை முன்னிட்டு, 21 அடி உயரம், 21 அடி அகலம், 21 படி களுடன் பிரம்மாண்ட கொலு அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) தொடங்கிய இந்தக் கொலு வரும் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 9 தினங்களும் இரவு 9 மணிக்கு கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு முன் உள்ள வெள்ளி ஊஞ்சலில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளான, நவராத்திரி அம்மனுக்கு ஊஞ்சல் உற் சவமும், தீபாராதனையும் நடைபெறும்.கொலுவில் ஸ்ரீ நடராஜர் முதல் சிறிய பொம்மைகள் வரை சுமார் 4 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பொம்மைகள் வைக்கப்பட்டுள் ளன.பிரம்மாண்ட கொலுவை திரளான பக்தர்கள் வந்து பார்த்து தரிசித்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து கோயில் செயலர் உ.வெங்கடேச தீட்சிதர் கூறுகையில், சாரதா நவராத்திரி என்றழைக்கப்படும் இந்த நவராத்திரி விழாவில் ஓரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை உள்ள உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிகளை வழிபடும் வண்ணம் இந்தக் கொலு வைத்து வணங்கப்படுகிறது என்றார்.