வேலூர் நறுவீ மருத்துவமனை மூளையின் ரத்த ஓட்டத்தை நிறுத்தி இருதயத்தையும் இயக்கத்தை மாற்றி அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.
வேலூரில் நறுவீ தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையின் தலைவர் ஜிவி சம்பத் மற்றும் மருத்துவ குழுவினர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியை சேர்ந்த ஆந்திர மாநில வருவாய்த்துறையில் பணியாற்றும் பணியாளர் முரளி (55) என்பவருக்கு திடீரென ரத்த அழுத்தம் காரணமாக மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் நறுவீ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இவருக்கு பால் ஹென்றி, பூபேஷ், சிவக் குமார், விநாயக் சுக்லா உள்ளிட்ட மருத்துவர்கள் மூளையில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, அதே நேரத்தில் இருதயத் தையும் எக்கோ மூலம் அரைமணிநேரம் செயற்கையாக செயல்பட வைத்து மூளைக்கு ரத்த-ஓட்ட்டம் செல்லாமல் தடுத்து மூளை யில் உள்ள ரத்த கசிவு ஏற்பட்டுள்ள ரத்த குழாய் 8 மணி நேர அறுவை சிகிச் சையை வெற்றிகரமாக செய்தனர்.
இந்த அறுவை சிகிச் சையின் போது மூளையின் சூட்டையும் தடுக்க உடல் தட்ப வெட்ப நிலையானது மாற்றியமைக்கப்பட்டது. இந்தியாவிலேயே இருதயத்தையும் நிறுத்தி, மூளையில் ரத்த கசிவுக்கு அறுவை சிகிச்சை செய்து சாதனைபடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட முரளி நலமுடன் மீண்டும் பணிக் கும் செல்கிறார். அவர் மருத்துவ குழுவுக்கு நன்றி தெரிவித்தார்.
நாட்டில் முதல் முதலாக மூளை ரத்த கசிவுக்கு இருதயத்தை நிறுத்தி அறுவை – சிகிச்சை செய்து இம்மருத்துவமனைநாட்டில் முதல்முறையாக சாதனை படைத்துள்ளது. இவர் வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் தமிழக முதல்வரின் காப்பீட்டு திட்டம் பொருந் தவில்லை, தமிழகத்தை செய்தவர்கள் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இந்த அறுவை சிகிச்சையை செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.