fbpx
Homeபிற செய்திகள்பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா (பி.ஏ.ஐ) கோவை மையம் சார்பில் பொறியாளர்கள் தின விழாவில் 3...

பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா (பி.ஏ.ஐ) கோவை மையம் சார்பில் பொறியாளர்கள் தின விழாவில் 3 பேருக்கு விருது

பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா (பி.ஏ.ஐ) கோவை மையம் சார்பில் அவிநாசி சாலை கிராண்ட் ரீஜென்ட் ஓட்டலில் பொறியாளர் தின விழா நடைபெற்றது.

இதில் அத்திக்கடவு – அவிநாசி திட்ட இயக்குனர் (ஓய்வு) சிவலிங்கம், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் (சாலை பாதுகாப்பு) மனுநீதி, அரசு தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் அருமை ராஜ் ஆகியோருக்கு சிறந்த பொறியாளர் விருதுகள் வழங்கப்பட்டன.

பி.ஏ.ஐ. தலைவர் லட்சுமணன் பேசுகையில், நாட்டின் வளர்ச்சிக்கு பொறியாளர்களின் பங்களிப்பு மகத்தானது. கட்டுமானங்கள், கண்டுபிடிப்புகள் என பூமியை மாற்றி அமைப்பவர்கள், இன்று விண்வெளி நோக்கி பயணிக்கின்றனர், என்றார்.

விருது பெற்ற பொறியாளர்கள் ஏற்புரை ஆற்றினர். பி.ஏ.ஐ. தேசிய தலைவர் விஸ்வநாதன், செயலாளர் பிரசாத் சக்ரவர்த்தி, பொருளாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img