fbpx
Homeபிற செய்திகள்சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் பாராட்டு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் காவல் கண்காணிப்ப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விவாதிப்பு கூட்டத்தில் கடந்த மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை போன்ற குற்ற செயல்களில் தொடர்புடைய நபர்களை கைது செய்தும் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களை பாராட்டி கண்காணிப்பாளர் ஊக்குவித்தார்.

3 காவல் ஆய்வாளர்கள்-, 6 உதவி ஆய்வாளர்கள், 8 சிறப்பு உதவி ஆய்வாளர்கள்-, 5 தலைமை காவலர்கள், 3 முதல் நிலைக் காவலர்கள், 17 காவலர்கள்- என மொத்தம் -42 பேரை பாராட்டி, கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சான்றிதழ் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img