fbpx
Homeபிற செய்திகள்கோவை போக்குவரத்து சிக்னல்களில் மரக்கன்று வழங்கிய காவல் ஆணையர்

கோவை போக்குவரத்து சிக்னல்களில் மரக்கன்று வழங்கிய காவல் ஆணையர்

கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் தலைமையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மாநகர காவல்துறையும், ஊர்காவல்படையும் இணைந்து, போக்குவரத்து சிக்னல்களில் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கும் விழா இன்று (5ம்தேதி) காலை 10 மணியளவில் நடை பெற்றது.

காந்திபுரம் சிக்னல் மற்றும் செல்வபுரம் சிவாலயா ஜங்சனில் கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் பொது மக்களுக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் ரோஹித் நாதன் ராஜகோபால், வடக்கு காவல் துணை ஆணையர் டாக்டர் ஆர்.ஸ்டாலின் (ஐபிஎஸ்), தெற்கு காவல் துணை ஆணையர் டாக்டர்.கே.சரவணக்குமார், போக் குவரத்து திட்டம் கூடுதல் காவல் துணை ஆணையர் எம்.ரவிச்சந்திரன், காவல் உதவி ஆணையர் ஏ.சேகர், ஊர்காவல்படை பிரதேச தளபதி சி.எஸ்.விக்னேஷ்வர், இருபால காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண் டார்கள். மேலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட மரக்கன்றுகளை பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றார்கள்.

படிக்க வேண்டும்

spot_img