fbpx
Homeபிற செய்திகள்விருதுநகரில் 1200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

விருதுநகரில் 1200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர்  குழந்தைகள் மற்றும் பெண்களின் வளர்ச்சியில் முக்கிய கவனம் செலுத்தி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். 

அதன்படி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக செயல்படும் ஒரு திட்டமாகும்.

இதன் முக்கிய நோக்கம் கர்ப்பிணிகள் மற்றும் 0-5 வயது குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்தி, ஊட்டச்சத்து பற்றாக்குறை, குழந்தைகளின் இறப்பு மற்றும் கர்ப்பிணிகளின் பேறுகால இறப்பு இல்லாத 6161T LOIT 60T சமுதாயத்தை உருவாக்குவதாகும். 

இத்திட்டத்தில் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் குறித்த தகவல்களை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் சென்று சேர்ப்பதற்கு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர்கள் மூலம் வீடுதோறும் சத்துணவு, சுகாதாரக் கல்வி அளிப்பதுடன் தாய்பால் வாரவிழா, ஊட்டச்சத்து வாரவிழா, சமுதாய வளைகாப்பு விழா, கைகழுவும் தின விழா, குழந்தைகள் தினவிழா, ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி தினம், அயோடின் தின விழா, கிராம சுகாதார ஊட்டச்சத்து தினம், சமுதாயம் சார்ந்த நிகழ்வுகளை அங்கன்வாடி மையங்களில் நடத்துதல் போன்ற விழாக்களின் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், கர்ப்பகால பராமரிப்பு, தாய்ப்பால் ஊட்டுதலை விரைவில் தொடங்குதல் மற்றும் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே ஊட்டுதல், இணை உணவு வழங்குதல், குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணித்தல், இரத்தசோகையை தடுத்தல், பெண்கல்வி, சரிவிகித உணவு, சரியான வயதில் திருமணம், தன் சுத்தம் மற்றும் சுகாதாரம், ஆரோக்கியமான செறிவூட்டப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல் உள்ளிட்ட கருத்துகளை பல்வேறு நிகழ்வுகளின் மூலம் பொதுமக்களிடையே சென்றடைய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்க வயதுக்கேற்ற உயரம் மற்றும் எடை ஆகியவை உள்ளதா என்பது குறித்து அங்கன்வாடி மையங்களில் அளவீடு எடுக்கப்படுகிறது. இவை இல்லாத குழந்தைகளின் விவரம் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு குழந்தைகளிடையே குள்ளத்தன்மை மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினை குறைப்பதற்கும், தடுப்பதற்கும் விழப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், குழந்தைகளின் வாழ்நாளில் முதல் 1000 நாட்களில் ஊட்டச்சத்தின் அவசியத்தை எடுத்துக்கூறி ஊட்டச்சத்தின் குறைபாட்டை தவிர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனை கருத்தில் கொண்டு, வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த வாய்ப்பும் நன்மையும் கிடைக்காமல், அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான திட்டம் இந்த வளைகாப்பு திட்டமாகும். சாதி மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகிறார்கள்.

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு விழாவில் அருப்புக்கோட்டை, சாத்தூர், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, விருதுநகர், சிவகாசி, வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, இராஜபாளையம் ஊரகம், இராஜபாளையம் நகரம் ஆகிய 12 வட்டங்களில் உள்ள மொத்தம் 1200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்  மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ஆகியோர்களால் வளைகாப்பு சீதன பொருட்கள் வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற கர்ப்பிணி தாய்மார்கள் கூறுகைகையில்,

“ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம் கர்ப்பகாலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும், என்னென்ன ஊட்டசத்து உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என கர்ப்பகாலத்தில் மேற்கொள்ள வேண்டியவைகள் குறித்து எடுத்துக் கூறினார்கள். மேலும் மாதமாதம் எடை பரிசோதனை செய்து, ஆலோசனைகளை பெற்று வருகிறோம். அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் எனக்கு வழங்கப்படும் சத்துமாவினை உண்டு வருகிறோம். தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கும் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் வீட்டில் நடத்துவது போல் புடவை, தட்டு, மாலை, வளையல்கள், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு சீர்வரிசை பொருட்களுடன் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டதுடன், 5 வகையான உணவு வழங்கப்பட்டது. இது எங்களுக்கு பூரிப்பாகவும் மனமகிழ்ச்சியாகவும் இருந்தது. எங்களது

வீட்டில் இந்த நிகழ்ச்சி நடத்தியிருந்தால் கூட இந்த அளவிற்கு பெரிய நிகழ்ச்சியாக இருந்திருக்காது. பல்வேறு கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டு, பெரிய விழாவாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது எங்களுக்கு மிகுந்த மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தாய் உள்ளத்தோடு சகோதரனாக, அப்பாவாக எங்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தி எங்கள் உள்ளத்தை மகிழ்வித்த  தமிழ்நாடு முதலமைச்சருக்கு கர்ப்பிணி தாய்மார்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி” என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img